மருத்துவமனைகளில் படுக்கைகள் பற்றாக்குறை; மருந்துகள் தட்டுப்பாடு, ஆக்ஸிஜன் பற்றாக்குறை, தடுப்பூசித் தட்டுப்பாடு - திரும்பிய பக்கமெல்லாம் இத்தகையக் கதறல்களால் இந்திய சுகாதாரத் துறையின் நுரையீரல் திணறிக் கொண்டிருக்கிறது. ஆம், கொரோனா மீண்டும் வேகமெடுத்து, ஒரு மாதத்துக்கும் மேலாக ஒட்டுமொத்த இந்தியாவையும் அறல வைத்துக் கொண்டிருக்கிறது.